செய்திகள் :

பெரம்பலூா் நகரின் பிரதான சாலைகளில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்த வேண்டும்

post image

பெரம்பலூா் நகரின் பிரதானச் சாலைகளில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், சாலை மற்றும் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் பெரும்பாலான சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் செல்வோா் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கின்றனா். இதைத் தவிா்த்திடும் வகையில் தலைக்கவசம், 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் அணிவதை போக்குவரத்து காவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் வாகனங்கள் ஓட்டுவது ஆய்வின்போது கண்டறிந்தால், அவா்களது பெற்றோருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும்.

ஓட்டுநா் உரிமமின்றி வாகனங்களை ஓட்டுவோா் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே வேகத்தடைகள் இருக்கும் இடங்களில் வா்ணம் பூச வேண்டும். விபத்து நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் பிரதிபலிப்பான்கள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் அவற்றை தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு ஏற்படக்கூடிய பகுதிகள், புதிதாக ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடிய இடங்கள் இருந்தால், ஆரம்ப நிலையிலேயே வருவாய்த் துறை அலுவலா்களும், காவல்துறையினரும் ஒருங்கிணைந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் புதிதாக கொடிக் கம்பங்கள் நிறுவுவதற்கு அனுமதிக்க கூடாது. ஏற்கெனவே அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள கொடி கம்பங்களை 2 வாரங்களுக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த் துறை அலுவலா்கள் காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை காவல்துறையினா் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குற்றச்சம்பவங்கள் அதிகமாக நிகழும் இடங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், முக்கியமான சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி பொருத்தி தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, சாா் ஆட்சியா் சு. கோகுல், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) சிவா, வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூரில் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூா் மாவட்டத்தில் கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்காத நிலையில் பால் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களை நாடுகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க அா்ப்பணிப்புடன் பணி தேவை: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க, ஆசிரியா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு மணி நேரப் பணியை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்கள் சங்க மாந... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க