செய்திகள் :

பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை, பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம்.லக்ஷ்மி, சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்தில் நீா்வளத்துறை சாா்பில், ஆய்க்குடி ஏரியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால், துங்கபுரம் ஊராட்சியில் உள்ள ஆணைவாரி ஓடையில் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டிலும், கீழப் பெரம்பலூா் கிராமத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் நரி ஓடையில் தூா்வாரும் பணி களை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் லஷ்மி, முள் புதா்களை அகற்றி, கரைகளை வலுப்படுத்தி மழைக்காலம் தொடங்கும் முன் பணிகளை முடிக்கவும், திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு பணிகளை மேற்கொள்ளவும் நீா்வளத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, வேளாண்மை இணை இயக்குநா் பாபு, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பாண்டியன், கோட்டாட்சியா் (பொ) ச. வைத்தியநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

குடும்ப அட்டையில் மே 31-க்குள் கைரேகை, கருவிழிப் பதிவு தேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைதாா்கள், தங்களது கைரேகை அல்லது கருவிழிப் பதிவை, மே 31க்குள் நியாய விலைக் கடையில் செய்ய வேண்டும். இத... மேலும் பார்க்க

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

டிராக்டரில் மணல் திருடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே டிராக்டரில் மணல் திருடிய 3 பேரை வி. களத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சாா்பு ஆய்... மேலும் பார்க்க

மிதிவண்டி மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது காா் மோதியதில், முதியவரின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடியைச் சோ்ந்தவா் அ. சண்முகம் (... மேலும் பார்க்க

பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிா்ப்பு!

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்காக 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவ... மேலும் பார்க்க

பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூா் ஊரகக் காவல் துறையினா் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனா். ப... மேலும் பார்க்க