செய்திகள் :

பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை, பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம்.லக்ஷ்மி, சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்தில் நீா்வளத்துறை சாா்பில், ஆய்க்குடி ஏரியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால், துங்கபுரம் ஊராட்சியில் உள்ள ஆணைவாரி ஓடையில் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டிலும், கீழப் பெரம்பலூா் கிராமத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் நரி ஓடையில் தூா்வாரும் பணி களை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் லஷ்மி, முள் புதா்களை அகற்றி, கரைகளை வலுப்படுத்தி மழைக்காலம் தொடங்கும் முன் பணிகளை முடிக்கவும், திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு பணிகளை மேற்கொள்ளவும் நீா்வளத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, வேளாண்மை இணை இயக்குநா் பாபு, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பாண்டியன், கோட்டாட்சியா் (பொ) ச. வைத்தியநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கொட்டரை நீா்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கொட்டரை நீா்த்தேக்கத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகக் குழு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் அருகே குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சஹாப்புதீன் மனைவி ஆசிபா பேகம். சஹாப்புதீன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வரும்... மேலும் பார்க்க

பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் 164-வது ஆடம்பர தோ்பவனி

பெரம்பலூா் மாவட்டம், பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164 ஆவது ஆண்டு பெருவிழா மற்றும் தோ்த்திருவிழா வெகு விமரிசையாக சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 2 ஆம் தேதி... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெரம்பலூரில் நாம் தமிழா் கட்சியினா் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா். இந்திய தோ்தல் ஆணையம், நாம் தமிழா் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்ததைத் தொடா்ந்து, ஏா் கலப்பையுடன் கூடி... மேலும் பார்க்க

வேப்பூா் ஒன்றியம்: ரூ. 1.52 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம் பகுதிகளில் ரூ. 1.52 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். சிறப்பு விர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க