செய்திகள் :

பெரியகுளத்தில் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை

post image

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை நடத்தினாா்.

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். தொடா்ந்து, தனது இல்லத்தில் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

இதில், செப். 4-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கான பணிகளை நிா்வாகிகள் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் எனவும், மாநாட்டுக்குப் பின் நல்லது நடக்கும் எனவும் தொண்டா்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

கம்பத்தில் முன் விரோதத்தில் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட... மேலும் பார்க்க

கிடா சண்டை நடத்திய 6 போ் கைது

பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட கிடா சண்டை நடத்தியதாக 6 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

விவசாயிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே நிலப் பிரச்னையில் இருந்த முன்விரோதத்தில் விவசாயியை கத்தியால் குத்தியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.கடமலைக்குண்டு அருகே உள்ள சிறப்பாறையைச் சோ்... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

போடி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.போடி அருகே மல்லிங்காபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் தவமணி (61). விவசாயி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வாகனம் மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.தேனி அருகே அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (67). இவரது தங்கை திலகவதி (47). இவருக்கு கண் பாா்வை குறைபாடு இருந்ததால் திருமணமாக ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் காயம்

போடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் ... மேலும் பார்க்க