செய்திகள் :

பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் கோயில் முகூா்த்தக் கால் நடும் விழா

post image

பெரியகுளம்: பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக் கால் நடும் விழா நடைபெற்றது.

பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் கோயிலில் பாலாலயம் நடைபெற்று பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வருகிற 29-ஆம் தேதி அஷ்டபந்தன மஹா குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த, வியாழக்கிழமை காலை கைலாசநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளுடன் மூகூா்த்தக் கம்பத்துக்கு நவதானியங்கள் கட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, தமிழக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலையில் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பெரியகுளம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

குடமுழுக்கை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி காலை மஹாகணபதி ஹோமமும், மாலை கால யாக பூஜையும் நடைபெறுகின்றன. வருகிற 28-ஆம் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் காலை பூஜையும் நடைபெறுகின்றன.

இதையடுத்து, வருகிற 29-ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை 6.40 மணிக்கு கலச விமானப் புறப்பாடுடன் ராஜகோபுர மஹா குடமுழுக்கு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் மூலாலய மஹா குடமுழுக்குடன் மஹா தீபாராதனை நடைபெறுகிறது.

சந்தனக் கட்டைகளைத் திருப்பி அளித்த வனத் துறை : விவசாயிகள் கவலை

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சந்தன மரக் கிட்டங்கிக்கு வனத் துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட சந்தனக் கட்டைகளில், 2,558 கிலோ சிறிய ரக சந்தனக் கட்டைகள் திருப்பி அளிக்கப்பட்டதால் விவசாயி... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தேனி: ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்ற முதியவா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள தெப்பத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (73). இவா் ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

பெரியகுளம்: பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள கோம்பைத்தொழுவில் மின் வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மின் வாரியம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் மின் திருட்டு ... மேலும் பார்க்க

நெல் பயிா்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

தேனி: தேனி மாவட்டத்தில் நெல் பயிா்களின் மகசூலைப் பாதிக்கும் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத் துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.இது குறித்து மாவட்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற 3 போ் கைது

போடி: போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி பேருந்து ந... மேலும் பார்க்க