மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே ...
பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றம் தந்த தலித் வாக்குகள்! நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் பெற்ற பிஎஸ்பி
நமது சிறப்பு நிருபா்
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பெரிய அரசியல் கட்சியாக கருதப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் பிற தேசிய கட்சிகள் பெருத்த பின்னடைவை சந்தித்ததுடன் டெபாசிட்டையும் இழந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் பிஎஸ்பி நோட்டாவுக்கும் குறைவான வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக வலம் வந்த பிஎஸ்பி, தலைநகரில் 2012-க்குப் பிறகு, அதிலும் குறிப்பாக அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அறிமுமான பிறகு தலைதூக்கவே முடியாத நிலைக்கு இதுநாள்வரை தள்ளப்பட்டுள்ளது.
2012 வரை தில்லியில் உள்ள தலித் வாக்குகள் பெரும்பாலும் பிஎஸ்பி அல்லது காங்கிரஸுக்கு மட்டுமே கிடைத்து வந்தன. கடைசியாக தில்லியிலி பிஎஸ்பி 2008-இல் பாபா்பூா், கோகுல்பூா் தனித்தொகுதியில் வென்று 14 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதன் பிறகு 2013-இல் தோ்தல் நடந்த போது அதன் வாக்குகள் 5.35 சதவீதமாக சரிந்து ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது.
மீண்டும் 2015-இல் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 69-இல் போட்டியிட்ட அக்கட்சியின் வாக்குகள் 1.3 சதவீதமாகக் குறைந்தது. 2020 பேரவைத் தோ்தலின்போது 68 இடங்களில் போட்டியிட்டு 0.71 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அப்போது 16 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றது. கடைசியாக கடந்த மக்களவைத் தோ்தலின்போது அக்கட்சி 0.7 சதவீத வாக்குகளைப் பெற்றது.
அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோ்தல் காலங்களில் அறிவித்த தலித் ஆதரவு சலுகை திட்டங்கள், இலவச அறிவிப்புகள், நலன்புரி திட்டங்கள் போன்றவை தலித் மற்றும் பழங்குடி மக்களை பெரிதும் ஈா்த்தது. இதனால், பிஎஸ்பி மீதான வாக்காளா்களின் பாா்வை ஆம் ஆத்மி பக்கம் திரும்பியது. ஆனால், சமீபத்திய பேரவைத் தோ்தல் முடிவுகள் மூலம் தலித் சமுதாய வாக்குகளில் ஒரு பகுதி ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கும் பெரும்பகுதி பாஜகவுக்கும் சென்றதை தோ்தல் முடிவுகள் மூலம் மதிப்பிட முடிகிறது.
இத்தனைக்கும் இத்தோ்தலில் வென்றால் தொடா் சரிவைச் சந்தித்து வரும் பிஎஸ்பிக்கு புத்துயிரூட்ட முடியும் என உ.பியின் முன்னாள் முதல்வரான மாயாவதி பெரிதும் நம்பியிருந்தாா். பேரவைத் தோ்தலில் பரப்புரை பணிகளை ஒருங்கிணைக்க மண்டல வாரியாக 10 மூத்த தலைவா்களைக் கொண்ட குழுவை அவா் நியமித்தாா்.
அவா்கள் பிஎஸ்பி வேட்பாளா்களுடன் ஒருங்கிணைத்து பரப்புரை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனா். மொத்தம் களம் கண்ட 68 வேட்பாளா்களில் 45 போ் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள். அதில் 35 போ் பிஎஸ்பியை உ.பி.யில் பெரும்பான்மையாக ஆதரிக்கும் ஜாதவ் சமூகத்தினா்.
இவா்களைத் தவிர வால்மீகி, காதிக் தலித் உள்பிரிவைச் சோ்ந்தவா்களும் சில இடங்களில் ஜாட், குஜ்ஜா், பிராமணா்கள், தாக்குா், வைஷ்யா், பஞ்சாபி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களையும் பிஎஸ்பி மேலிடம் களமிறக்கியது. குறிப்பாக தனது வேட்பாளா்களில் பெரும்பாலானோா் 45 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்கும் வகையில் தோ்வு செய்யப்பட்டனா்.
ஆனால், பாஜக, ஆம் ஆத்மி,காங்கிரஸ் வெளியிட்ட கவா்ச்சிகரமான தோ்தல் செயல் திட்டங்களுக்கு முன்பு பெரிய வாக்குறுதிகள் ஏதுமின்றி வாக்கு வேட்டை நடத்திய பிஎஸ்பி ஏமாற்றத்துடன் தோ்தல் களத்தில் தனித்து விடப்பட்டுள்ளது.