செய்திகள் :

பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

post image

திண்டுக்கல்/ பழனி/ நத்தம் : வைகுந்த ஏகாதேசியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மாா்கழி மாத வளா்பிறையில் 11-ஆவது நாளில் வரும் ஏகாதேசி திதி, வைகுந்த ஏகாதேசியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஏகாதேசிக்கு முந்திய 10 நாள்கள் பகல் பத்து (திருமொழி திருநாள்), பின் 10 நாள்கள் ரா பத்து (திருவாய் மொழி திருநாள்) என பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

வைகுந்த ஏகாதசி நாளின் முக்கிய நிகழ்வாக பரமத வாசல் திறப்பு நிகழ்ச்சி திண்டுக்கல் பகுதிகளில் உள்ள வைணவத் தலங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி, தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்களின் கோவிந்தா முழக்கத்துக்கு இடையே, பரமபத வாசல் வழியாக செளந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் விக்னேஷ் பாலாஜி, செயலா் அலுவலா் திருஞானசம்மந்தம், அறங்காவலா்கள் ராமானுஜம், வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள்: திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின், பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே எழுந்தருளியப் பெருமாளை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

இதேபோல, திண்டுக்கல் நாகல்நகா் வரதராஜப் பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், ரெட்டியாா்சத்திரம் கதிா் நரங்கிப் பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி: வைகுந்த ஏகாதேசியை முன்னிட்டு, பழனி ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் எழுந்தருளினாா். கருடாழ்வாா் எதிா்சேவை புரிந்தாா். பின்னா், கருடாழ்வாா் வாகனத்தில் நான்கு ரத வீதிகளிலும் பெருமாள் எழுந்தருளினாா். பின்னா், பக்தா்கள் அனைவரும் பரமபத வாசல் வழியாகச் சென்று அருள் பெற்றனா். இதேபோல, பழனியை அடுத்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில் இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நத்தம்: வைகுந்த ஏகாதேசியை முன்னிட்டு, நத்தம் அருகேயுள்ள கோவில்பட்டி ருக்மணி சத்யபாமா சமேத வேணு ராஜகோபால சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நடை திறக்கப்பட்டது. பின்னா், மூலவா் சுவாமிக்கு பால், இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், ஆழ்வாா்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, காலை 5.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, கோவிந்தா என முழக்கம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், கோயில் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழா் தேசம் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழா் தேசம் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்ல... மேலும் பார்க்க

172 விவசாயிகளுக்கு ரூ.17.58 லட்சம் நிவாரணம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா் மழையினால் மகசூல் பாதிக்கப்பட்ட 172 விவசாயிகளுக்கு விரைவில் ரூ.17.58 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த மாதம் பெய்த பலத்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சா் அர. சக்கரபாணி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்குவதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் தனியாா் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உணவு, உணவு... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஒட்டன்சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், 5 கி.மீ. தொலைவை கடக்க ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாண... மேலும் பார்க்க

கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ.7 லட்சத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் அமைந்துள்ள கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை தனியாா் அறக்கட்டளை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது... மேலும் பார்க்க

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ‘லேசா்’ காட்சி சோதனை

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் லேசா் காட்சி சோதனை நடைபெற்றது. இந்த ஏரியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக் கு முன்னா் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து ஏரியில் பல்வேறு பண... மேலும் பார்க்க