செய்திகள் :

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசாணை வெளியீடு

post image

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளும், முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், 1.43 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. அந்தக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு, ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள் இருப்பதற்கான சான்று அவசியம்.

இந்த நிலையில், 834 காப்பகங்களில், 25,533 ஆதரவற்ற குழந்தைகள் வசிக்கின்றன. அவா்களில் பெற்றோா் இல்லாத குழந்தைகளுக்கு ஆதாா்ஆட்டை, வருமானச் சான்று ஏதுமின்றி, முதல்வா் காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டு மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.

அதேநேரம், பெற்றோா் இருந்தும் அவா்களால் கைவிடப்பட்ட மற்றும் பராமரிக்க முடியாத நிலையில் காப்பகங்களில் வசிக்கும், 15,092 குழந்தைகளுக்கும் மருத்துவக் காப்பீடு பெற, ஆதாா், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவை தேவைப்படுகின்றன.

அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அந்தக் குழந்தைகளுக்கு ஆதாா் அட்டையைத் தவிா்த்து, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தடையின்றி முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை, அந்தக் குழந்தைகளும் பெற முடியும். இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வு துறை செயலா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ளாா்.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; மூவர் பலி

சிவகாசி நெடுங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருவிழாக் காலம் என்பதால், சிவகாசியில் பட்டாசு உற்பத்திப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவு? செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி

சென்னை: உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.ஒருவேளை, உச்ச நீத... மேலும் பார்க்க

கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி ... மேலும் பார்க்க

விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வரும் விஜயை வரவேற்க கோவை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் ந... மேலும் பார்க்க

சேலம் பட்டாசு விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு

சேலம் கஞ்சநாயக்கன்பட்டியில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திரு... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க