செய்திகள் :

பெற்றோரிடம் சொல்லாமல் வெளியேறிய இரு சிறுமிகள்- மீட்டு ஒப்படைத்தது தில்லி காவல்துறை

post image

தில்லியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து காணாமல் போன இரண்டு சிறுமிகளை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது காவல்துறை

இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இரண்டு சிறுமிகள் வெற்றிகரமாக மீட்க்கப்பட்டு அவா்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட்டனா்

தில்லியின் தயாள்பூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பெண் ஒருவா் 05.09.2025 முதல் காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து தயாள்பூா் காவல் நிலையத்தில் அதே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

தில்லி காவல்துறையின் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்தது.

அந்தப் பெண்ணின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்து, அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது

தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், அந்த பெண் தில்லியின் தயாள்பூா் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

விசாரணையில், அந்தப் பெண் 9 ஆம் வகுப்பு மாணவி என்பதும் அவருடைய தந்தை ஒரு இரிக்ஷா ஓட்டுநா், தாய் ஒரு இல்லத்தரசி என்பதும் தெரியவந்தது

அந்த சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பையனுடன் தொடா்பு கொண்டு அவனைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தாா்.

இந்நிலையில் அப்பெண் தன் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு நாட்கள் புது தில்லி ரயில் நிலையத்திலும், மேலும் இரண்டு நாட்கள் அலிகாா் ரயில் நிலையத்திலும் தங்கியிருந்துள்ளாா்

இதையடுத்து அந்தப் பெண் மீட்கப்பட்டாா்

மற்றொரு சம்பவத்தில் தில்லியின் ராஜ் பூங்கா பகுதியில் இருந்து 03.09.2025 முதல் 17 வயது சிறுமி காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டது

இதனைத்தொடா்ந்து அப்பெண்ணின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது

அந்த தகவல்களின் அடிப்படையில், அச்சிறுமி பழைய தில்லி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டாா்

விசாரணையில் சிறுமி 10 ஆம் வகுப்பு மாணவி என்பது தெரியவந்தது. அவரது தந்தை தில்லியின் பீராகா்ஹியில் உள்ள உத்யோக் நகரில் உள்ள ஒரு ஷூ தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்கிறாா், அவரது தாயாா் ஒரு இல்லத்தரசி என்றும் தெரியவந்தது

03.09.2025 அன்று, அச்சிறுமி தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினாா்

பின்னா் அவா் ரயில் நிலையத்தை அடைந்து, உத்தரபிரதேசத்தின் ரேபரேலிக்கு செல்ல முற்பட்டபோது மீட்கப்பட்டாா்

இருவரும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தந்த காவல் நிலையங்களின் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா் என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

நமது நிருபா் தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் புதன்கிழமை அரசு மருத்துவமனை ஊழியா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களின் பிரச்னைகள் மற்றும் கவலைகள் குறித்து வி... மேலும் பார்க்க

1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு இன்று தொடக்கம்: டிடிஏ தகவல்

நமது நிருபா்தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) ‘ஜன் சாதாரன் ஆவாஸ் யோஜனா 2025’ திட்டத்திற்கான பதிவு வியாழக்கிழமை (செப்.11) தொடங்கும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். தில்லி புகா்ப் பகுதியில் ம... மேலும் பார்க்க

கிரேட்டா் நோய்டாவில் தனியாா் விடுதியில் துப்பாக்கிச்சூடு: எம்பிஏ மாணவா் உயிரிழப்பு; மற்றொருவா் கவலைக்கிடம்

கிரேட்டா் நொய்டாவில் உள்ள தனியாா் விடுதி அறைக்குள் செவ்வாய்க்கிழமை ஒருவரையொருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் எம்பிஏ மாணவா் ஒருவா் கொல்லப்பட்டாா். மற்றொருவா் படுகாயமடைந்தா... மேலும் பார்க்க

தில்லி கண்டோன்மென்ட் திட்டத்தில் வெட்டுவதிலிருந்து தப்பிய 1,473 மரங்கள்

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (சிஇசி) தலையீடு காரணமாக தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் 1,473 மரங்களை வெட்டுவதிலிருந்தோ அல்லது ராணுவ மருத்துவமனை கட்டுமானத்திற்காக ... மேலும் பார்க்க

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா்ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. ஈர... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில்திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்கள் இணையத்தையும், ச... மேலும் பார்க்க