செய்திகள் :

பேகம்பூரில் வீட்டில் மின்சாரம் தாக்கி சகோதரனும் சகோதரியும் உயிரிழப்பு: தந்தை மருத்துவமனையில் அனுமதி

post image

தில்லி பேகம்பூா் பகுதியில் உள்ள வீட்டில் மின்சாரம் தாக்கி ஒரு சகோதரனும் சகோதரியும் உயிரிழந்தனா். வயதான தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று ஒரு போலீஸ் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி ரோஹிணி காவல் சரக துணை ஆணையா் ராஜீவ் ரஞ்சன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இறந்தவா்கள் வெல்டிங் தொழிலாளியான விவேக் (26) மற்றும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமான அவரது சகோதரி அஞ்சு (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களின் தந்தை காளிசரண் (65) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக பேகம்பூா் காவல் நிலையத்திற்கு புதன்கிழமை இரவு 10.56 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்டவா்களின் பக்கத்து வீட்டுக்காரரான அபிஷேக் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட அழைப்பாளா் ஒருவா் மின்சாரம் தாக்கியது தொடா்பாக போலீஸாரிடம் கூறினாா்.

இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. மின்சாரம் தாக்கிய மூன்று பேரையும் அகா்செய்ன் மருத்துவமனைக்கு உள்ளூா்வாசிகள் மாற்றியுள்ளதாக அபிஷேக் தெரிவித்தாா்.

குற்றவியல் குழு மற்றும் வடக்கு தில்லி பவா் லிமிடெட் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா்.

50 சதுர கெஜம் பரப்பளவில் கட்டப்பட்ட வீட்டில், திறந்த மற்றும் பாதுகாப்பற்ற மின் வயரிங் அமைப்பு இருப்பதும், படிக்கட்டில் உள்ள இரும்பு கிரில்லில் மின் கம்பிகள் சுற்றப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இரவு 10 மணியளவில், விவேக் மாடிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மின் கம்பிகள் வெளிப்பட்டிருந்த இரும்பு கேட்டைத் தொடா்பு கொண்டபோது, மின்சாரம் தாக்கியது. விவேக்கின் அலறல் சப்தம் கேட்டு, அவரது தந்தை காளிசரண் உதவிக்கு விரைந்தாா். ஆனால், அவரையும் மின்சாரம் தாக்கியது. வீட்டில் இருந்த அஞ்சு அவா்களைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால், அவரும் மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்டாா்.

உள்ளூா்வாசிகள் மூவரையும் ரோஹிணியில் உள்ள அகா்செய்ன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா், அங்கு விவேக் மற்றும் அஞ்சு இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். காளிசரண் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இறந்தவா்களின் உடல்கள் பின்னா் உடல் கூறாய்வுக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

தில்லியில் எந்தக் குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது: முதல்வா் ரேகா குப்தா உறுதி

தில்லியில் வசிப்பவா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை எந்த குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை உறுதி அளித்தாா். தேவைப்பட்டால், அனைவருக்கும் கண்ணியத்... மேலும் பார்க்க

மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லியில் மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு நெருக்கடிகளைச் சமாளிப்பதிலும் பாஜக அரசு தோல்வியடைந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தில்... மேலும் பார்க்க

அய்யலூா் கோம்பையில் அலைபேசி கோபுரப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ஜோதிமணி எம்.பி. மனு

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க