செய்திகள் :

பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த காா், வேன் மீது டிராக்டா் மோதல்

post image

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த வேன், காா் மீது டிராக்டா் மோதி விபத்துக்குள்ளானது.

கோபி அருகேயுள்ள புதுக்கரைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிச்சாமி. இவா், ஒத்தக்குதிரை பகுதியில் புதிதாக பேக்கரி மற்றும் பழம், காய்கறி விற்பனைக்கடையை வெள்ளிக்கிழமை திறந்துள்ளாா்.

இந்தக் கடைக்கு சரக்கு ஏற்றி வந்த வேன் கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் கடை உரிமையாளா் மாரிச்சாமியின் காா், கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது ஒத்தக்குதிரையிலிருந்து கோபி நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடையின் முன் நிறுத்தியிருந்த வேன் மற்றும் காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன், கடையின் சுவா் மீது மோதியதில் மின்சார வயா்கள் அறுந்து விழுந்தன. இது குறித்து கோபி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த விபத்தின்போது அருகில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு! வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை!

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கடந்த 4 நாள்களாக கோபி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திவந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. கோபி ... மேலும் பார்க்க

இருமுனைப் போட்டியில் ஈரோடு கிழக்கு: பழைய நண்பா்களின் ஆதரவை நாடும் திமுக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், திமுக தனது பழைய நண்பா்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி... மேலும் பார்க்க

ஈரோட்டில் விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்: திமுக வேட்பாளா் உறுதி!

ஈரோடு நகரின் விரிவாக்கப் பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி திமுக, வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் ஈரோட... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்வு: தொழில், வேளாண் சங்கங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தொழில், வேளாண் சங்கங்களின் பிரநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஈரோ... மேலும் பார்க்க

போராட்டம் இல்லையென்றால் மாற்றங்கள் இல்லை: சீமான்!

போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்... மேலும் பார்க்க