செய்திகள் :

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

post image

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் உறுதியான பதிலடி தரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதன் பின்னணியில் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தொடா்புகள் உறுதியான நிலையில், கடந்த 23-ஆம் தேதிமுதல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானும் எதிா்வினையாற்றுவதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.

இந்தச் சூழலில், கடந்த 24-ஆம் தேதி இரவில் எல்லைப் பகுதிகளில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். அடுத்தடுத்த நாள்களிலும் இரவு நேரத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடா்கதையாகி வரும் நிலையில், இந்திய ராணுவம் வலுவான பதிலடியை கொடுத்து வருகிறது.

இதனிடையே, இரு நாடுகளின் ராணுவ செயல்பாட்டு தலைமை இயக்குநா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக பேசினா். அப்போது, பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், வடக்கு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி சிறிய ரக ஆயுதங்கள் மூலம் புதன்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். ஜம்மு, பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 3,323 கி.மீ. நீள எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன. இதில் குஜராத் முதல் ஜம்முவின் அக்னூா் வரையிலான சா்வதேச எல்லை (சுமாா் 2,400 கி.மீ.), ஜம்மு முதல் லே வரையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (சுமாா் 740 கி.மீ.), சியாச்சினில் 110 கி.மீ. எல்லைக் கோடு அடங்கும்.

ஜெய்ப்பூர்: மனைவியை கொலை செய்து உடலை குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்த நபர் கைது

ஜெய்ப்பூரில் மனைவியை கொலை செய்து உடலை குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், விஸ்வகர்மா தொழில்துறை பகுதியில் ஷாஹித் குரேஷி(37) தனது மனைவி ஃபர்ஹீன் குரேஷியை(2... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 15 வெளிநாட்டவர் கைது! நாடுகடத்த நடவடிக்கை!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புது தில்லியின் துவாரகா பகுதியில், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர்... மேலும் பார்க்க

ஹரியாணா: தனியார் நகை கடன் வங்கியின் பூட்டை உடைத்து 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் கொள்ளை

ஹரியாணாவில் தனியார் நகை கடன் வங்கியில் 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஹரியாணா மாநிலம், பரசுராம் சௌக்கில் தனியார் நகை கடன் வங்கி இயங்கி வருகிறது. வியாழக்கிழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதியை முடக்கும் இந்தியா?

பாகிஸ்தானுக்கு உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவிருக்கும் நிதி மற்றும் கடன்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் உள்ளிட்ட வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கம்!

பாகிஸ்தானின் கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது எனக் கூறப்படும் நிலை... மேலும் பார்க்க

எப்போதும் மகிழ்ச்சியான பிரதமரை பஹல்காம் தாக்குதல் மாற்றி விட்டது: சந்திரபாபு நாயுடு

பயங்கரவாதத்தை ஒடுக்கும் பிரதமரின் நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த துணை நிற்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமராவதி நகரை மறுஉருவாக்கம் செய்யும் திட்டப்பணிகளை பிர... மேலும் பார்க்க