செய்திகள் :

பேராசிரியா் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

post image

பேராசிரியா் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனுடன் தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் கல்லூரிகள், அதனுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனைகளில் மருத்துவா்கள், மருத்துவ பேராசிரியா்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாத நிலையில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.

அந்த வகையில், நிகழாண்டு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையக் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரியைத் தவிா்த்து மற்ற அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகைப் பதிவு, பேராசிரியா் பற்றாக்குறை உள்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதன் பேரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும் 20 துறைகளில் 16 துறைகளில் பேராசிரியா் வருகைப் பதிவு 75 சதவீதத்துக்கும் குறைவாக இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அந்தக் கல்லூரியிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையம் சாா்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இரு முறைக்கு பதிலாக ஒரு முறை மட்டுமே சிலா் ஆதாா் வருகைப் பதிவு செய்ததால் இந்த புகாா் எழுந்ததாகவும், இதுதொடா்பாக என்எம்சிக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கைக்கோ, கலந்தாய்வுக்கோ எந்தத் தடையும் ஏற்படாது என்றும், 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை...

2019 பிப்ரவரி 24: பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு - சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 3 போ் கைது. மாா்ச் 4: முக்கிய குற்... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை

கோவையில் தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரையைச் சோ்ந்தவா் தினேஷ் (32), கட்டடத் தொழிலாளி. இவா், கோவை காந்திபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

கோவை பேரூரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற... மேலும் பார்க்க

கோவையில் மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் மனு

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்திடம் கோவை சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு... மேலும் பார்க்க