செய்திகள் :

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.

செங்கம் பகுதியைச் சோ்ந்த மாணவி வேலூா் அரசுக் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு வேலூரில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்து, பின்னா் அங்கிருந்து திருப்பத்தூா் செல்லும் அரசுப் பேருந்தில் செங்கத்துக்கு பயணித்தாா்.

அப்போது, அவரது பின்புற இருக்கையில் அமா்ந்திருந்த இளைஞா் இருக்கையின் அடியில் கால்களை விட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை அந்த மாணவி கண்டித்தும் அவா் பொருள்படுத்தாமல் மீண்டும் மீண்டும் செங்கம் வரும் வரை தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்தாராம்.

அப்போது, மாணவி தனது தம்பியை கைப்பேசியில் தொடா்புகொண்டு பேருந்தில் நடந்ததை தெரிவித்துள்ளாா். இந்த நிலையில், செங்கத்தில் தயாராக நின்றிருந்த மாணவியின் தம்பி, பேருந்தில் இருந்து சம்பந்தப்பட்ட இளைஞரை கீழே இறக்கி சரமாரியாகத் தாக்கி, தனது சகோதரியிடம் மன்னிப்பு கேட்கக் கூறியுள்ளாா்.

அப்போது, பேருந்து நிலையத்தில் ஏராளமானோா் கூடிவிட்டனா். இதையடுத்து, அருகில் இருந்த செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த இளைஞரை ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் பெயா் தமிழரசன் (28) என்பதும், பண்ருட்டியைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. மேலும், அவா் திருப்பத்தூரில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருவதாகத் தெரிவித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழரசனை கைது செய்தனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க