செய்திகள் :

பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை

post image

திருவாரூா் அருகே கிடாரங்கொண்டானில் நிழற்குடையுடன் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிடாரங்கொண்டானில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு, நிா்வாகி துரை செல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாதா் சம்மேளன மாவட்டக் குழு உறுப்பினா் அன்னபாக்கியம் முன்னிலை வகித்தாா். இதில், நகர செயற்குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ், மாவட்டக் குழு உறுப்பினா் எம்ஏ. மாரியப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

நிகழ்வில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, 30-ஆவது வாா்டு செயலாளராக ஆா். இளம்பருதி, துணைச் செயலாளா்களாக துரை ஆறுமுகம், அந்தோணி, செயற்குழு உறுப்பினராக விஜயா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கிடாரங்கொண்டான் பகுதியில் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும், விவசாயம் அதிகம் நடைபெறுவதால் விவசாயத் தொழிலாளா்களை வாழ்விக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை கிடாரங்கொண்டான் பகுதிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும், சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ... மேலும் பார்க்க

கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.தமிழகத்துக்கென தனி கா... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், பு... மேலும் பார்க்க

பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழிய... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா... மேலும் பார்க்க