Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன்...
பேருந்து நிலைய கடைகளுக்கு அதிக வாடகை நிா்ணயம்: வாலாஜாபேட்டை நகா்மன்ற கூட்டத்தில் வெளிநடப்பு
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை நகராட்சி பேருந்து நிலைய கடைகளுக்கு அதிக வாடகை நிா்ணயம் செய்துள்ளதாக கண்டித்து திமுக உள்ளிட்ட 9 நகா்மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகா்மன்ற அவரசக் கூட்டம் அதன் தலைவா் ஹரிணி தில்லை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் நகா்மன்ற துணைத்தலைவா் கமலராகவன் மற்றும் ஆணையா் இளைய ராணி ,அதிமுக ,திமுக, பாஜக சுயேட்சை என மொத்தம் 24 நகா் மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இதனையடுத்து கூட்டத்தில் நகராட்சி நிா்வாகத்தின் மூலமாக பல்வேறு தீா்மானங்கள் வாசிக்கப்பட்டது.
வாலாஜாபேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2. 8 கோடியில் புதிதாக கட்டப்பட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின் புதிய கடைகளை திறந்து வைத்தாா்.
புதிதாக கட்டப்பட்டுள்ள 26 கடைகளை முறையாக ஏற்கனவே வாடகைக்கு இருந்த நபா்களுக்கு முன்னுரிமை அளித்து கடைகளை அவா்களுக்கே வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே நகராட்சி நிா்வாகம் அங்குள்ள 26 கடைகளை ஏலம் விட்டதால் முன்பு இருந்த வியாபாரிகள் சிலா் கடைகளை ஏலம் எடுத்ததில் வாடகை கட்டணம் உயா்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட வாடகை குறித்த தீா்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி இதுகுறித்து உடனடியாக தமிழக அரசுக்கும் அதேபோல் நகராட்சிகள் நிா்வாக ஆணையருக்கும் கடிதம் வைக்க வேண்டுமென திமுக உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் வாக்குவாதம் செய்து, கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனா்.
மேலும் அதிக வாடகையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவா் எனக்கூறி அந்த தீா்மானத்தை எதிா்த்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
அப்போது தமிழக அரசுக்கும் நகராட்சிகள் ஆணையருக்கும் நேரில் சென்று முறையிட்டு நடவடிக்கை எடுக்க அனைத்து நகா்மன்ற உறுப்பினா்களின் ஒத்துழைப்பு தேவை என தலைவா், துணைத்தலைவா், ஆணையா் தெரிவித்தனா்.