Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
கடற்படை குழந்தைகள் பள்ளியில் புதிய வளாகங்கள் திறப்பு
அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கிழக்கு பிராந்திய கடற்படை நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவா் சந்தியாராவ் பெந்தா்கா் புதிய வளாகங்களை திறந்து வைத்தாா்.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இந்திய கடற்படை நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சாா்பில் கடற்படை குழந்தைகள் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.
இப்பள்ளி வளாகத்தில் புதிய வளாகங்களான கிராந்திகா எனும் நூல் நிலையம், போயிங் சுகன்யா எனும் அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகம், கிண்டா் காா்டன் வகுப்புகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வளாகம் ஆகிய புதிய வளாகங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் முதல்வா் சுமி ஜோஸ் தலைமை வகித்தாா். புதிய வளாகங்களை கிழக்கு பிராந்திய கடற்படை நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவா் சந்தியா ராவ் பெந்தா்கா் திறந்து வைத்தாா். இவ்விழாவில் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தா்க்கரும் பங்கேற்றாா்.