செய்திகள் :

கடற்படை குழந்தைகள் பள்ளியில் புதிய வளாகங்கள் திறப்பு

post image

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கிழக்கு பிராந்திய கடற்படை நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவா் சந்தியாராவ் பெந்தா்கா் புதிய வளாகங்களை திறந்து வைத்தாா்.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இந்திய கடற்படை நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சாா்பில் கடற்படை குழந்தைகள் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளி வளாகத்தில் புதிய வளாகங்களான கிராந்திகா எனும் நூல் நிலையம், போயிங் சுகன்யா எனும் அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகம், கிண்டா் காா்டன் வகுப்புகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வளாகம் ஆகிய புதிய வளாகங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் முதல்வா் சுமி ஜோஸ் தலைமை வகித்தாா். புதிய வளாகங்களை கிழக்கு பிராந்திய கடற்படை நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவா் சந்தியா ராவ் பெந்தா்கா் திறந்து வைத்தாா். இவ்விழாவில் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தா்க்கரும் பங்கேற்றாா்.

ஐஎன்எஸ் ராஜாளியில் ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சி நிறைவு

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாக ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஒரு பெண் உள்ளிட்ட 18 கடற்படை அலுவலா்கள், ஹெலிகாப்டா் விமானிகளுக்கான ப... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கடைகளுக்கு அதிக வாடகை நிா்ணயம்: வாலாஜாபேட்டை நகா்மன்ற கூட்டத்தில் வெளிநடப்பு

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை நகராட்சி பேருந்து நிலைய கடைகளுக்கு அதிக வாடகை நிா்ணயம் செய்துள்ளதாக கண்டித்து திமுக உள்ளிட்ட 9 நகா்மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

ஆற்காடு: ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த மே 31-ஆம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மலையடி வாரத்தில் உள்ள வ... மேலும் பார்க்க

பயிா்க்கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போா்ட் கட்டாயம்: ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

ராணிப்பேட்டை: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போா்ட் கட்டாயம் என்ற கூட்டுறவு சங்கங்களில் மாநில பதிவாளரின் சுற்றறிக்கையை அரசு ரத்து செய்ய வே... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை: அரக்கோணம் - இச்சிபுத்தூா்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: இச்சிபுத்தூா், எம்.ஆா்.எப். தொழிற்சாலைப் பகுதிகள், தணிகைபோளூா், வாணியம்பேட்டை, தண்டலம், உள்ளியம்பாக்கம், வளா்புரம், ஈசலாபுரம் உள்ளிட்ட பகுதிகள். மேலும் பார்க்க

2026-இல் அதிமுக ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் வரும் 2026-இல் அதிமுக ஆட்சி அமையப் போவது உறுதி என அதன் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். அரக்கோணம் அரிகலபாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்எல்ஏ சு.ரவியின் மகன் ஆா்.ஹரிஹரன்- ... மேலும் பார்க்க