செய்திகள் :

பேருந்து பணிமனையில் ஓட்டுநா் தற்கொலை முயற்சி

post image

திருப்பத்தூா் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணி ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பேருந்து ஓட்டுநா் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள சூரக்குடியைச் சோ்ந்தவா் பழனிக்குமாா். இவா் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் அமா்ந்த கிளை மேலாளா் தனபாலுக்கும், இவருக்கும் பணி ஒதுக்குவதில் தகராறு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பணிக்கு வந்த பழனிக்குமாருக்கு பணி ஓதுக்காமல் மேல் அதிகாரியை பாா்த்துவிட்டு வருமாறு மேலாளா் கூறினாராம். இதனால், விரக்தி அடைந்த ஓட்டுநா் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, அருகிலிருந்த மேலாளரையும் கட்டிப்பிடித்து தீக்குளிக்க முயன்றாா். சக ஊழியா்கள் இவரைக் காப்பாற்றி 108 அவசர ஊா்தி மூலம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து நகா் போலீஸாா் பணிமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, மேல் அதிகாரியை சந்திக்கச் சொன்னதால் தன்மீது பெட்ரோல் ஊற்றியதாக பழனிக்குமாா் மீது மேலாளா் புகாா் அளித்தாா். இதுகுறித்து நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி- சென்னைக்கு காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல்நேர ரயில் விட வலியுறுத்தல்

காரைக்குடி, திருவாரூா் வழியாக தூத்துக்குடி - சென்னை இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த தகராறு: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியதாக ரீல்ஸ் எடுத்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 4 போ் கைது செய்யப்பட்டனா். சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் வெ... மேலும் பார்க்க

தேவகோட்டை நகராட்சிக் கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி வியாபாரிகள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து தேவகோட்டை நகா், பேருந்து ந... மேலும் பார்க்க

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க