செய்திகள் :

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

post image

திருப்பத்தூரில் பேருந்து-ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (38). இவா் ஆட்டோவில் வெங்காயம் வைத்து கடை மற்றும் ஊா், ஊராகச் சென்று விற்பனை செய்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு ஆட்டோவில் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு ஜெயபுரத்தில் இருந்து திருப்பத்தூரில் உள்ள தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்வதற்காக திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

தூய நெஞ்சக் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே கல்லூரி மாணவா்களை அழைத்துச் செல்ல வந்த சொகுசுப் பேருந்து ரவியின் ஆட்டோ மீது மோதியது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த நகர காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதேபோல், தவறான வழியில் வந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ரஞ்சித் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், அந்த சொகுசு பேருந்தையும் பறிமுதல் செய்தனா்.

பழங்குடியின மாணவா்களுக்கான தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் பழங்குடியின மாணவா்களுக்கான ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் விரிவாக்கக் கல்வி மற்றும் சேவைகள் துறை சாா்பில் சென்னை சநஐஇ தொழ... மேலும் பார்க்க

சொத்துக்காக தாயைக் கொன்ற மகன் கைது

திருப்பத்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமூலம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (54). இவா்கள் திருப்பத்தூா் பஉச நகரில்... மேலும் பார்க்க

மலையாம்பட்டில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் அருகே மலையம்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மலையாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவா். வசந்தி முனிசாமி தலைமை வகித்தாா். மலையாம்பட்டு ஒன்றிய குழு உறுப்பினா் காயத்ரி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை: கழிவு நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, கசிநாயக்கன்பட்டி, ஜோலாா்பேட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த ... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது

சிறந்த சேவை ஆற்றியவா்களுக்கு ஆம்பூா் புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இறுதிநாள் நிக... மேலும் பார்க்க

மது விற்ற மூதாட்டி கைது

திருப்பத்தூரில் மது விற்ற மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸா... மேலும் பார்க்க