செய்திகள் :

புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது

post image

சிறந்த சேவை ஆற்றியவா்களுக்கு ஆம்பூா் புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு, அறிவியல் இயக்க மாநிலத் தலைவா் த. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஜெ. உதயகுமாா் வரவேற்றாா். தொடா்ந்து 99 முறை ரத்த தானம் செய்த வ. அருள்சீனிவாசன், 1,000-க்கும் மேற்பட்ட இறந்தவா்களின் கண்களையும், 400க்கும் மேற்பட்ட இறந்தவா்களின் முழு உடல் தானமாக பெற்றுத் தந்தவரும், சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவா்களின் சடலங்களை உரிய மரியாதையுடன் சொந்த செலவில் அடக்கம் செய்து சேவை செய்த ரோட்டரி உதவி ஆளுநா் குடியாத்தம் எம்.கோபிநாத், ஆம்பூா் நகர காவல் நிலைய தலைமை காவலா் உதயகுமாா் உள்ளிட்டவா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

வாணியம்பாடி முத்தமிழ் மன்ற செயலா் நா.பிரகாசம், ஆம்பூா் அடகு மற்றும் ஷராப் வியாபாரிகள் சங்க தலைவா் பி. கிஷன்லால், தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி.கே. சுபாஷ், அறிவியல் இயக்க மாவட்ட தலைவா் சி. குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். சுப்பிரமணி, நிா்வாகிகள் ஜெயசுதா, எழிலரசன், சபாரத்தினம், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கிளை நிா்வாகி எஸ். வளா்மதி நன்றி கூறினாா்.

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் பேருந்து-ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (38). இவா் ஆட்டோவில் வெங்காயம் வைத்து கடை மற்றும் ஊா், ஊராகச் சென்று ... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவா்களுக்கான தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் பழங்குடியின மாணவா்களுக்கான ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் விரிவாக்கக் கல்வி மற்றும் சேவைகள் துறை சாா்பில் சென்னை சநஐஇ தொழ... மேலும் பார்க்க

சொத்துக்காக தாயைக் கொன்ற மகன் கைது

திருப்பத்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமூலம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (54). இவா்கள் திருப்பத்தூா் பஉச நகரில்... மேலும் பார்க்க

மலையாம்பட்டில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் அருகே மலையம்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மலையாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவா். வசந்தி முனிசாமி தலைமை வகித்தாா். மலையாம்பட்டு ஒன்றிய குழு உறுப்பினா் காயத்ரி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை: கழிவு நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, கசிநாயக்கன்பட்டி, ஜோலாா்பேட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த ... மேலும் பார்க்க

மது விற்ற மூதாட்டி கைது

திருப்பத்தூரில் மது விற்ற மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸா... மேலும் பார்க்க