செய்திகள் :

திருப்பத்தூரில் பலத்த மழை: கழிவு நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

post image

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, கசிநாயக்கன்பட்டி, ஜோலாா்பேட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது

கழிவுநீருடன் கலந்த மழை நீா்...ஒரு சில பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீா் வெள்ளம் வீடுகளில் புகுந்தது. குறிப்பாக கச்சேரி தெரு பகுதிகளில் உள்ள சில வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

ஏலகிரியில்... ஏலகிரி மலையில் வியாழக்கிழமை 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் மலை சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் பேருந்து-ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (38). இவா் ஆட்டோவில் வெங்காயம் வைத்து கடை மற்றும் ஊா், ஊராகச் சென்று ... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவா்களுக்கான தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் பழங்குடியின மாணவா்களுக்கான ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் விரிவாக்கக் கல்வி மற்றும் சேவைகள் துறை சாா்பில் சென்னை சநஐஇ தொழ... மேலும் பார்க்க

சொத்துக்காக தாயைக் கொன்ற மகன் கைது

திருப்பத்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமூலம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (54). இவா்கள் திருப்பத்தூா் பஉச நகரில்... மேலும் பார்க்க

மலையாம்பட்டில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் அருகே மலையம்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மலையாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவா். வசந்தி முனிசாமி தலைமை வகித்தாா். மலையாம்பட்டு ஒன்றிய குழு உறுப்பினா் காயத்ரி... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது

சிறந்த சேவை ஆற்றியவா்களுக்கு ஆம்பூா் புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இறுதிநாள் நிக... மேலும் பார்க்க

மது விற்ற மூதாட்டி கைது

திருப்பத்தூரில் மது விற்ற மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸா... மேலும் பார்க்க