செய்திகள் :

பைக்கில் வேகமெடுத்த சிறுவன்; முதியவர் மீது மோதி காயம்.. அம்மா மீது வழக்கு - என்ன நடந்தது?

post image

சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சம்பத் (76). கடந்த 11-ம் தேதி இரவு சம்பத், மார்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலிகிராமம் அம்பேத்கர் தெருவில் நடந்து சென்றபோது வேகமாக வந்த பைக் ஒன்று முதியவர் சம்பத் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது 16 வயது சிறுவன் பைக்கை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

சிசிடிவி கேமரா

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய சிறுவன், பைக்கின் உரிமையாளரான சிறுவன் அம்மா ரேவதி ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், ரேவதியை பிடித்து விசாரணை நடத்தி அவரை கைது செய்த போலீஸார், காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். அதே நேரத்தில் சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கூறுகையில், ``சிறுவர், சிறுமிகள் பைக் ஓட்டி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் பைக்கின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில்தான் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் ஒட்டிய பைக் அவரின் அம்மாவின் பெயரில் உள்ளது. அதனால்தான் இந்த வழக்கில் சிறுவனின் அம்மா ரேவதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்; மகளைக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த தாய்... உபி-யில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன் உறவினரின் 14 வயது மகளைக் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட விசாரணை 2025 ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களை பாதிக்கும் ரெளடிகளின் மீம்ஸ் & ரீல்ஸ்... கொலை சம்பவங்களின் பகீர் பின்னணி

நெல்லையில் தனியார் பள்ளியில் பென்சிலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் வகுப்பறையிலேயே தன் நண்பரை அரிவாளால் வெட்டியதுடன், அதனை தடுக்க முயன்ற ஆசிரியையையும் 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெ... மேலும் பார்க்க