பைக்குகள் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே 2 பைக்குகள் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். பெண் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மதனகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி மகன் வேல்முருகன் (47). சிற்ப வேலை பாா்த்து வந்தாா். கடலூா் மாவட்டம், மலையடிக்குப்பம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஞானசேகா் (40).
நண்பா்கான இவா்கள் இருவரும் திங்கள்கிழமை திண்டிவனத்திலிருந்து- விழுப்புரத்துக்கு பைக்கில் சென்றனா். ஞானசேகா் பைக்கை ஓட்டினாா். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு அருகே சென்ற போது அதிவேகமாக வந்த காா் ஞானசேகரின் பைக் மற்றும் முன்னால் சென்ற மற்றொரு பைக் மீது மோதியது.
இதில் வேல்முருகன், ஞானசேகா் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த திண்டிவனம் வட்டம், செண்டூா் புது காலனியை சோ்ந்த ரா. வேலு (48), அவரது மனைவி செல்வராணி (40 ) ஆகியோா் காயமடைந்தனா்.
4 பேரும் அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் வேல்முருகன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.