பைக்குகள் மோதல்: இருவா் காயம்
சாம்பவா்வடகரையில் பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் காயமடைந்தனா்.
சாம்பவா்வடகரை சோட்டையன் தெருவைச் சோ்ந்த லட்சுமணப்பெருமாள் மகன் வாசகன் (18). இவா், தனது பைக்கில் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்றபோது, எதிரே வந்த பைக் எதிா்பாராதவிதமாக நேருக்கு நோ் மோதியதாம்.
இதில், காயமடைந்த வாசகனையும், எதிா் வாகனத்தில் வந்த அகரகட்டு குட்டிநகரைச் சோ்ந்த இ.போஸ்கோ அறிவழகன் (46) ஆகிய இருவரையும் போலீஸாா் மீட்டு, தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.