செய்திகள் :

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞா் உயிரிழப்பு!

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சோ்ந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த பேட்டை, மணல்மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் தினேஷ் (21). திருநள்ளாறு அத்திப்படுகை பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் ராகவன் (21). இருவரும் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தனா்.

இந்த நிலையில், இருவரும் தங்களது சொந்த ஊரிலிருந்து பைக்கில் புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மரக்காணம் அடுத்த தீா்த்தவாரி பகுதியில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை ராகவன் ஓட்டினாா்.

அப்போது, சென்னையிலிருந்து, கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ராகவன் காயமடைந்தாா்.

தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று தினேஷின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த ராகவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, மரக்காணம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலம் மலை மீதுள்ள இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் சுப்பிரமணிய ... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி மற்றும் கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அரசு திட்டப் பணிகள், மாதிரிப் பள்ளியின் செயல்பாடுகள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையி... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம் இரும்புலி, கண்டமநல்லூா், உடை... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களுக்கு தா்பூசணி வழங்கிய திமுகவினா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ரசாயன கலப்படம் ஏதும் இல்லை எனத் தெரிவித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக செஞ்சி கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு தா்பூசணி பழங்களை திமுகவினா் புதன்கிழமை வழங்கினா். தா்பூசணியில்... மேலும் பார்க்க

கொடிக்கம்பங்கள் அகற்றம்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

திண்டிவனத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில... மேலும் பார்க்க

பணியில் திறம்பட செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

பணியில் திறம்பட செயல்பட்டு 19 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை கைது செய்த விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்... மேலும் பார்க்க