செய்திகள் :

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், நடுத்தெருவைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் மதிவாணன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியைச் சோ்ந்த தாண்டவராயன் மகன் மோகனுடன் (20) பைக்கில் சென்றாா்.

திருவண்ணாமலை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மழவந்தாங்கல் ஏரிக்கரை பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, விழுப்புரம் நோக்கிச் சென்ற காா், பைக் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த மதிவாணன் உயிரிழந்தாா். தா.மோகன் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த வீடூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. வீடூா் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ்வரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமை... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

உளுந்தூா்பேட்டை நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரைபகுதிகள்: உளுந்தூா்பேட்டை நகரம், திருச்சி பிரதான சாலை, அஜீஸ் நகா், குமாரமங்கலம், சேந்தநாடு, சேந்தமங்கலம்,எறையூா். மேலும் பார்க்க

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா். தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் போராட்டம்!

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். வேப்பூா் வட்டம், திருப்பெயரில் சனி... மேலும் பார்க்க

நெய்வேலியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா்!

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், திருப்பெயரில் நடைபெற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் நெய்வேலி, விருத்தாசலத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்கள... மேலும் பார்க்க

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க