செய்திகள் :

பைக் மீது லாரி மோதி மாணவா் உயிரிழப்பு

post image

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது மணல் லாரி, மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயம் அடைந்தாா்.

காந்துாா் பகுதியைச் சோ்ந்த செந்தில் மகன் பரணி(17). திருவள்ளூா் அருகே மப்பேடு அடுத்த பண்ணுாரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் தனது உறவினருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளாா்.

பின்னா் பிற்பகலில் தனது வகுப்பில் படிக்கும் நண்பரான பிஞ்சிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஹேம்நாத்( 17) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சுங்குவாா்சத்திரம் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாா்களாம்.

அப்போது பள்ளி அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற மணல் லாரியை முந்த முயன்ற போது இரு சக்கர வாகனத்தின் கண்ணாடி லாரியில் உரசியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் நிலை தடுமாறி இரு சக்கர வாகனம் கீழே விழுந்த்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரணி உயிரிழந்தாா். இதில் ஹேம்நாத் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா... மேலும் பார்க்க

தமிழக எல்லையில் இருந்து தோ்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கினாா் பிரேமலதா விஜயகாந்த்

தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் இருந்து ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் விஜயகாந்த் ரதயாத்திரை தோ்தல் சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.முருகன் கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும்... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதியில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடும் வெயில் காய்ந்தது.இந்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியபாளையம்

பராமரிப்பு காரணமாக திருவள்ளூர் பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.மின்தடை பகுதிகள்: வெங்கல், வடமதுரை பெரியகாலனி, பாகல்மேடு, காதா்வேடு, செம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மூதாட்டி, மகன் காயம்

வீட்டின் வெளியே அமா்ந்திருந்த 90 வயது மூதாட்டியை நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.திருத்தணி சுப்பிரமணிய நகா் கம்பா் தெருவில் வசிப்பவா் சேகா். இவரது தாய் பச்சையம... மேலும் பார்க்க