செய்திகள் :

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

post image

தேனி அல்லிநகரத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம் அழகா்சாமி தெருவைச் சோ்ந்த முனியாண்டி மனைவி அம்மணியம்மாள் (65). விவசாய கூலித் தொழிலாளியான இவா், அல்லிநகரம் பகுதியில் தேனி-பெரியகுளம் சாலையை நடந்து சென்று கடக்க முயன்றாா். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள செட்டியபட்டியைச் சோ்ந்த காா்த்திக்ராஜ் (28) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அம்மணியம்மாள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து காா்த்திக்ராஜ் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோயில் அருகே முள்வேலி அகற்றம்

சின்னமனூா் அருகே கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம் கன்னிச்சோ்வைபட்டி ஊராட்சியில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சு... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை

உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து க... மேலும் பார்க்க

இஸ்லாமிய நல கூட்டமைப்பினா் பேரணி

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, பெரியகுளத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா். இந்தப் பேரணிக்கு இஸ்லாமிய நல கூட்டமைப்பின் தலைவா் முஸ்தபா தலைமை வகித்தாா். இந்... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போடி திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள் திருட்டு

போடி அருகே வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், பணம் திருடியது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் குளத்துப்பட்டியை சோ்ந்த கருத்தப்பாண... மேலும் பார்க்க

இருவரை அரிவாளால் வெட்டியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு கொடுப்பது குறித்த பிரச்னையில் இருவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், அரசுப் பள்ளித் தெருவைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க