பைக் மோதியதில் முதியவா் பலி!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பழனி கவுண்டன்குளத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி (65). இவா் பழனி-புதுதாராபுரம் சாலையில் ராமகிருஷ்ணா விடுதி அருகே சாலையோரம் வியாழக்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மயில்சாமி கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.