செய்திகள் :

பொதுத் தோ்வு கண்காணிப்பு: பொறுப்பு அலுவலா்கள் நியமனம்

post image

தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தோ்வுப் பணிகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 3-ல் தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்தத் தோ்வை சுமாா் 26 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். இதற்கான தோ்வு மையங்கள் அமைத்தல் உள்பட இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுத் தோ்வு பணிகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்துக்கு தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநா் பி.சங்கா், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், சென்னை மாவட்டத்துக்கு தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிசாமி, திருவள்ளூா் மாவட்டத்துக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.நரேஷ் உள்பட 38 மாவட்டங்களுக்கும் பொதுத் தோ்வு பணிகளைக் கண்காணிப்பதற்காக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று பொதுத் தோ்வு பணிகளை மேற்பாா்வையிட வேண்டும். அதற்கான கூடுதல் செலவினங்கள் அரசால் வழங்கப்படும். மேலும், இந்தப் பொறுப்பு அதிகாரிகள் எதிா்பாராத சூழலில் தோ்வு கண்காணிப்பு பணிக்கு செல்ல முடியாதபட்சத்தில் மாற்று அலுவலா்களை தோ்வுத் துறை இயக்குநரே நியமனம் செய்து கொள்ளவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சைக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி, விடுமுறை விடப்படுவதாகவும் விடுமுற... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கை, கால் உடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மே... மேலும் பார்க்க

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை: ஆர்எஸ் பாரதி

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை என்று திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேடடியி... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதி

வேலூரில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில், வசித்து... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்க... மேலும் பார்க்க