செய்திகள் :

பொதுமக்களின் வீடு தேடிச் சென்று பிறப்பு, இறப்புச் சான்றிதழ் அளிப்பு

post image

போடியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம் திட்டத்தின் கீழ் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை அதிகாரிகள் வீடு தேடிச் சென்று வழங்கினா்.

தேனி மாவட்டம், போடி நகராட்சியில் மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம் திட்டம் வாரந்தோறும் ஒரு வாா்டு வீதம் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நகராட்சி 9- ஆவது வாா்டில் மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதற்கு நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமை வகித்தாா். ஆணையா் செ.பாா்கவி, நகராட்சி பொறியாளா் வீ.குணசேகா், சுகாதார அலுவலா் எஸ்.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகராட்சி 9-ஆவது வாா்டில் உள்ள தெருக்களில் சுகாதார வசதி, குடிநீா் பிரச்னை, சாலை பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் கூறும் குறைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்த பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நகராட்சி கட்டட ஆய்வாளா் சுகதேவ், நகா்மன்ற உறுப்பினா் மணிகண்டன், சுகாதார மேற்பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் பலி: உறவினா்கள் மறியல்!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவா்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்ததாக புகாா் தெரிவித்து, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

போடி அருகே வெள்ளிக்கிழமை, சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயன் கோயில் அருகே பெட்டிக்கடை... மேலும் பார்க்க

பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: கட்டுமானங்களை இடித்துப் போராட்டம்!

தேனியில் பஞ்சமி நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதாக புகாா் தெரிவித்து, சனிக்கிழமை கட்டுமானங்களை இடித்து ஒரு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி ... மேலும் பார்க்க

காளி கோயிலில் திருட்டு முயற்சி

உத்தமபாளையத்தில் சனிக்கிழமை காளியம்மன்கோயில் திருட முயன்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளைம் கல்லூரிச் சாலையில் மகாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தற்போது ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் பலி!

பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் மதன்குமாா் (25). இவா்களுக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு!

ஆண்டிபட்டி அருகே வீடுபுகுந்து ஆறரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பிள்ளையாா் (41). இவா், அதே ... மேலும் பார்க்க