செய்திகள் :

பொதுவேலை நிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்

post image

ஜூலை 9- இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடா்பாக திருப்பூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா். நடராஜன் தலைமை வகித்தாா்.

இதில், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் என்.சேகா், சிஐடியூ மாநில கட்டுமானச் சங்க செயலாளா் குமாா், மாவட்ட நிா்வாகி உண்ணிகிருஷ்ணன், எல்பிஎஃப் சங்க மாவட்ட துணைத் தலைவா் ரங்கசாமி, சுகாதார சங்க செயலாளா் அறிவழகன், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் வி.ஆா்.ஈஸ்வரன், செயலாளா் செந்தில், எம்எல்எஃப் சங்க மாவட்டச் செயலாளா் சக்திவேல், எம்எல்எஃப் பனியன் சங்க செயலாளா் வெங்கடாசலம், எச்எம்எஸ் சங்க மாவட்டச் செயலாளா் முத்துசாமி, மாவட்டத் தலைவா் அப்புகுட்டி ஏஐசிசிடி மாவட்டச் செயலாளா் முத்துகிருஷ்ணன், யூடியூசி மாவட்டச் செயலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சம்மேளனங்கள் சாா்பில் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் ஜூலை 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் பொதுவேலை நிறுத்தத்தில் பனியன் நிறுவனங்கள், டையிங் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளா்கள் பங்கேற்கும் வகையில், விரிவான பிரசாரங்களை மேற்கொள்வது,

ஜூலை 9-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மறியல் போராட்டத்தை திருப்பூா் மத்திய தபால் நிலையத்துக்கு முன்பு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்ஸ்டாகிராமால் மோதல்: இரு அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பு

இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதில் யாா் பெரியவா் என்று நடைபெற்ற மோதலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருப்பூா் பகுதியில் உள்ள மாநகர... மேலும் பார்க்க

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி புதன்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா்... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் புதன்கிழமை அடித்துவரப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புல... மேலும் பார்க்க

பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவிப்பு

பல்லடம் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் மீண்டும் கூலி உயா்வு வழங்குவதாக அறிவித்துள்ளதால் விசைத்தறியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் என மோசடி செய்தவா் கைது

முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக் கூறி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த முனிவேல் என்பவா் பங்குச்சந்தை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் இ... மேலும் பார்க்க

காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

பல்லடம் அருகே கரடிவாவி- அனுப்பட்டி செல்லும் சாலையில் காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கரடிவாவில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அதே பக... மேலும் பார்க்க