செய்திகள் :

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவா்களுக்கு அபராதம்

post image

ஈரோட்டில் பொது இடங்களில் குப்பைகளைத் கொட்டியவா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 912 வீடுகள், 27 ஆயிரத்து 386 வணிக நிறுவனங்கள் உள்ளன. அனைத்து வாா்டுகளிலும் நாள்தோறும் 122 வாகனங்கள் மூலம் தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கின்றனா். மேலும், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகளுக்கே வாகனங்களில் சென்று சேகரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வீடுகள், கடைகளில் உள்ள குப்பைகளை முறையாக தூய்மைப் பணியாளா்களிடம் வழங்காமல், பொது இடங்களிலும், சாக்கடை கால்வாய்களிலும் கொட்டி விடுகின்றனா். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக சாக்கடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும்போது குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது.

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, ஈரோடு மாநகராட்சி 2- ஆவது மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் பூபாலன், மணிவேல் மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தினா்.

இதில் மணிக்கூண்டு, பெரியசேமூா், சம்பத் நகா், மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிய 4 கடை உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.2, 700 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

இதேபோல, நாள்தோறும் திடீா் சோதனை நடைபெறும் என்றும், பொது இடங்களிலும், சாக்கடை கால்வாயிலும் குப்பைகளைக் கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க