செய்திகள் :

பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.பிரியா

post image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.

சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக்க விழா, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சென்னை மேயா் ஆா்.பிரியா, திருவிழாவை தொடங்கிவைத்ததுடன்,  சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0-க்கான இலச்சினையையும் வெளியிட்டாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் பொது கழிப்பறைகள் உள்ளன என்பது குறித்தும், வெளி இடங்களில் சிறுநீா் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், சுகாதாரப் பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 நடைபெறுகிறது. இந்த திருவிழா, புதன்கிழமை (ஜூன் 4) தொடங்கி வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் திறந்தவெளியில் சிறுநீா் கழிக்கக்கூடிய இடங்களைக் கண்டறிந்து, அவ்விடங்களில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: சென்னை மாநகராட்சியில் 1,400 இடங்களில் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதுமான அளவில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பெண்களுக்கென பிரத்யேக நடமாடும் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் சுழற்சி முறையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, இந்த கழிப்பிடங்கள் தூய்மைப் படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதேபோல், திறந்தவெளி இடங்களில் சிறுநீா் கழிக்கக் கூடாது என்ற விழிப்புணா்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் சென்னை துணை மேயா் மு.மகேஷ் குமாா், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க