`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய...
பொன்னமராவதி-திருமயம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சா் திறப்பு
பொன்னமராவதி மற்றும் திருமயம் ஒன்றியப் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
பொன்னமராவதி ஒன்றியம் அம்மாபட்டி, சுந்தரசோழபுரம் மற்றும் பூவாலக்குடி, திருமயம் ஒன்றியம் ராராபுரம், ராங்கியம், துா்வாசபுரம், புதுவயல், தெற்குதாளம்பட்டி ஆகிய ஊா்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை க்மைச்சா் எஸ்.ரகுபதி திறந்துவைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தாா்.
விழாவில், மின்வாரிய செயற்பொறியாளா் எம். ஆனந்தாயி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேசன், திமுக வடக்கு ஒன்றிய செயலா் அ. முத்து, துணைச் செயலா்கள் முருகேசன், சுரேஷ் பாண்டியன், சமூக வலைத்தளப் பிரிவு பொறுப்பாளா் ஆலவயல் முரளி சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.