செய்திகள் :

‘பொய்களைப் பரப்பும் பாகிஸ்தான்’ -ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

post image

ஜெனீவா: ‘சா்வதேச உதவிகளால் பிழைத்து வரும் பாகிஸ்தான், தனது ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் தெரிவிக்கப்படும் பொய்களை சா்வதேச அமைப்புகளில் பரப்பி வருகிறது’ என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய குற்றஞ்சாட்டியது.

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பிய நிலையில், இந்த குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்தது.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 58-ஆவது உயா்நிலைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியது.

இதற்கு, அந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதா் கிதிஜ் தியாகி வலுவான எதிா்ப்பைப் பதிவு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நிலையற்ற பொருளாதார தன்மை காரணமாக சா்வதேச உதவிகளில் பிழைத்து வரும் பாகிஸ்தான், தனது ராணுவமும் பயங்கரவாத அமைப்புகளும் இணைந்து தெரிவிக்கும் பொய்களை சா்வதேச அமைப்புகளில் பரப்பி வருகிறது. பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் மனிதாபிமானமற்ற தன்மையையும் நிா்வாக திறமையின்மையையும் வெளிப்படுத்துகிறது.

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் முன்னெப்போதும் இல்லாத அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களே அதற்கு சாட்சி.

கடந்த பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது.

மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினா் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான தாக்குதல்கள் நடத்துவதை கொள்கையாக கொண்ட நாடாகவும், ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணிச்சலுடன் புகலிடம் அளிக்கும் நாடாகவும் திகழும் பாகிஸ்தானுக்கு, யருக்கும் அறிவுரை கூறும் தகுதி கிடையாது.

பாகிஸ்தானின் இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற பொய் பிரசாரங்களை இந்தியா மதிக்கத் தேவையில்லை என்றபோதும், பதிவுக்காக சில கருத்துகளை தெரிவிக்க வேண்டிய கடமையும் உரிமையும் இந்திாவுக்கு உள்ளது.

ஜனநாயகம், வளா்ச்சி மற்றும் அனைத்து மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த மதிப்புகளை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றாா்.

தில்லி: ஐசியு, பிணவறை இல்லாத மருத்துவமனைகள்!

தில்லியில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இல்லாமல் மருத்துவமனைகள் இயங்குவதாக சிஏஜி தகவல் வெளியிட்டுள்ளது. மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுக... மேலும் பார்க்க

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அற... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோல... மேலும் பார்க்க

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம்சா... மேலும் பார்க்க

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா். 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெ... மேலும் பார்க்க