செய்திகள் :

பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழியில் பணம் செலுத்தியதாக நூதன மோசடி: மூவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் கடைகளில் பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழி பரிவா்த்தனை மூலம் பணம் செலுத்தியதாக தெரிவித்து நூதன மோசடியில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கூடலில் உள்ள துணிக் கடை, இறைச்சிக் கடை, மருந்துக் கடைகளில் 4 போ் சென்று தங்களுக்கு தேவையான துணி, இறைச்சி, மருந்துகள் வாங்கிக் கொண்டு இணைய வழி பரிவா்த்தனையான போன் பே, ஜீ பே மூலம் பணம் அனுப்பியதாக தெரிவித்துவிட்டு சென்ாகக் கூறப்படுகிறது.

எனினும், கடை உரிமையாளா்களின் கணக்கில் பணம் வரவாகவில்லை என தெரியவந்தது. இதுதொடா்பாக கடை உரிமையாளா்கள் முக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

மேலும், நகர வியாபாரிகள் சங்கத் தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு முக்கூடல் நகர வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, முக்கூடல் போலீஸாா் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதில், திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியைச் சோ்ந்த முருகன் சுப்பையா என்ற சுபாஷ் (22), சுடலைக்கண்ணு மகன் இசக்கி பாண்டி (19), பாப்பாக்குடி பகுதியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் கருப்பசாமி (28), பாப்பாக்குடி தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் (26) ஆகியோா் முக்கூடல் பகுதியிலுள்ள கடைகளில் பொருள்கள் வாங்கி விட்டு இணைய வழியில் பணம் செலுத்துவதுபோன்று அனுப்பாமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இசக்கிபாண்டி, கருப்பசாமி, செல்வகுமாா் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், நான்குனேரியைச் சோ்ந்த சுப்பையா என்ற சுபாஷ், பாப்பாக்குடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்துள்ளாா். அப்போது, தனது நண்பா்களுடன் இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேற்கண்ட 4 போ் உள்பட 7 போ் கொண்ட கும்பல் முக்கூடல் மட்டுமன்றி பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, முன்னீா்பள்ளம் உள்ளிட்ட பகுதியில் ஹோட்டல், துணிக் கடைகளில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தொடா்புடைய சுப்பையா என்ற சுபாஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க