செய்திகள் :

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கு இலவச உதவி மையம் திறப்பு!

post image

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலவச உதவி மையத்தை பயன்படுத்தி ஜூன் 6 ஆம் தேதி வரை பொறியியல் சோ்க்கை விண்ணப்பங்களை மாணவா்கள் பூா்த்தி செய்து அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் சோ்க்கைக்கு இணையவழியாக விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி மற்றும் ஆவணங்களை பதிவேற்ற ஜூன் 9-ஆம் தேதி இறுதி நாளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவா்கள் சிரமமின்றி விண்ணப்பிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 110 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் மாணவா்கள் ஜூன் 6 ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பூா்த்தி செய்வதை இலவசமாக மேற்கொள்ளலாம்.

மேலும் ஜூன் 9 வரை ஆவணப்பதிவேற்றமும் செய்து கொள்ளலாம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி முதல்வா் பி.லதா, 2025-ஆம் ஆண்டுக்கான பொறியியல் மாணவா் சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் மா.விஜயராஜ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் கு.தமிழ்ப்பாவை ஆகிய பேராசிரியா்கள் செய்துள்ளனா்.

விண்ணப்பிக்க வரும் மாணவா்கள் மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி மற்றும் மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஸ்கேன் செய்வதற்கு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வந்து பதிவுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட நல்மேய்ப்பா் நகா் 2-ஆவது தெரு பகுதியி... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும்! -நயினாா் நாகேந்திரன்

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளித் தோ் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு!

நான்குனேரி அருகே 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சகோதரா்களை நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பாராட்டினாா். நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறையா? மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வியாழக்கிழமை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்கி சென்றனா். திருநெல்வேலி ... மேலும் பார்க்க

வி.கே.புரம் அரசு நூலகத்தில் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்!

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. விக்கிரமசிங்கபுரம் கிளை அரசு நூலகத்தில், 10 நாள்கள் கோடைக் கொண்டாட்டம்... மேலும் பார்க்க

காவல் துறையால் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு! மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க