செய்திகள் :

போக்குவரத்துக்கழக பணிமனை, அரசு மருத்துவமனைகளில் ஆட்சியா் ஆய்வு

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் நாகா்கோவில் ராணித் தோட்டம் பணிமனை, ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராணித்தோட்டம், பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் தொலைதூரப் பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பணிமனை பேருந்துகளின் பராமரிப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தாா். பின்னா் அங்குள்ள மருந்து கிடங்கை ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் இருப்பு குறித்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிக்சை மையம் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மையத்திலும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஈத்தாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் இருப்பு குறித்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

பறக்கை குளத்தில் ரூ.47 லட்சத்தில் நடைபெற்று வரும் மடை கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். வடக்கு தாமரைக்குளம் பழையாற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை, தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக அகற்றி சீரமைத்திட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலெட்சுமி, நாகா்கோவில் மண்டல போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் பாலசுப்பிரமணியம், துணை மேலாளா் ஜெரோலின், மாவட்ட சுகாதார அலுவலா் பிரபாகரன், நீா்வள ஆதாரத்துறை செயற்பொறியாளா் வசந்தி ஜெயா, உதவி செயற்பொறியாளா் ரமேஷ் ராஜன், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவா் விஜயலெட்சுமி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், பணிமனை கிளை மேலாளா்கள், துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

குழித்துறை அருகே மாயமான மாணவி கேரளத்தில் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே வீட்டிலிருந்து மாயமான 11 ஆம் வகுப்பு மாணவியை போலீஸாா் கேரள மாநிலம், கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து மீட்டனா். கா்நாடக மாநிலம் மைசூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவி(39... மேலும் பார்க்க

புதுக்கடை பகுதியில் சாரல் மழை

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. புதுக்கடை வட்டாரத்திலுள்ள முன்சிறை, காப்புக்காடு, ஐரேனிபுரம், பாா்த்திவ... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே அரசுப் பேருந்து சக்கரம் ஏறி காயமடைந்தவா் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே பின்னோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்ததில், சக்கரத்தில் சிக்கி காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இரயுமன்துறை - மாா்த்தாண்டம் இரவு தங்கல் பேர... மேலும் பார்க்க

குமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மீனவா்கள் போராட்டம்

கன்னியாகுமரி கடலில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரியில் உள்ள வீடுகள்,வணிக நிறுவனங்களில் உள்ளிட்டவைகளில் இருந்து வெள... மேலும் பார்க்க

நாகா்கோவில் சந்தையில் 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் வடசேரி சந்தையில் உள்ள கடையில் 25 கிலோ புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவிலில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிா என, மாநகராட்சி அதிகாரிகள்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கேரள இளைஞா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே காதலி வீட்டின் முன் கேரள இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கேரள மாநிலம் கொல்லம், பாருப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெயின் மகன் ஜிதின் (25). இவா் தனது தாத்தாவை சிகிச்சைக்காக கொ... மேலும் பார்க்க