செய்திகள் :

‘போக்சோ’ வழக்கில் சிக்கிய ஆர்சிபி வீரர்! 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் யஷ் தயாள் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதார் காவல் நிலையத்தில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் மீது 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் மீது மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் அனைவரையும் உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

காஜியாபாத் வழக்கில் தயாளின் போலீஸ் காவலுக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்தச் சம்பவமே ஓயாத நிலையில், கடந்த ஐபிஎல் தொடரின் போது 17 வயது சிறுமியை பாலியல் ரீதியில் யஷ் தயாள் பயன்படுத்திக் கொண்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் - பெங்களூரு போட்டியின் போது அந்தச் சிறுமியைத் தொடர்பு கொண்டு அருகில் அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவரிடம் தவறாக நடந்துகொண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யஷ் தயாள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஏற்கனவே, காஜியாபாத் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் யஷ் தயாள் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் புகாரில் ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டால் கூடுதலாக தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், யஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கை எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

RCB Star Yash Dayal Booked For Rape With A 17-Year-Old Minor During IPL 2025 In Jaipur

இதையும் படியுங்கள் |ரிஷப் பந்துக்கு மாற்றாக தமிழக விக்கெட் கீப்பருக்கு அழைப்பு விடுத்த பிசிசிஐ!

டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் ... மேலும் பார்க்க

5-ஆம் நாளில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார்: பேட்டிங் பயிற்சியாளர்

காயமடைந்த ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டின் ஐந்தாம் நாளில் பேட்டிங் செய்வார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆண்டர்சன் - டெண்டுலகர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. ந... மேலும் பார்க்க

அதிரடி பேட்டிங், அசத்தல் கேட்ச்: ஃபார்முக்கு திரும்பிய மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் க்ளென் மேக்ஸ்வெல் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 36 வயதாகும் க்ளென் மேக்ஸ்வெல் தனது அதிரடியான பேட்டிங்கிற்காக புகழ்ப்பெற்றவர். ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில்... மேலும் பார்க்க

46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டம... மேலும் பார்க்க

4-0: தொடரும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி டெஸ்ட் தொடரை வென்று... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை; செப்.14-ல் இந்தியா - பாக். மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க