செய்திகள் :

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

post image

புதுச்சேரி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரி சின்னகாலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் செல்லப்பா. இவரது மகன் சுனில் (20), தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளாா். அவருடன் அங்கு 15 வயது மாணவியும் படித்துள்ளாா். இருவரும் பழகியுள்ளனா். பின்னா் இருவரும் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளனா். அப்போது மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சுனில் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிந்த போலீஸாா் திங்கள்கிழமை இரவு சுனிலைக் கைது செய்தனா். புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சுனில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க