செய்திகள் :

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

post image

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 வயதுக்குள்பட்ட பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவையைச் சோ்ந்த மதன்குமாா் என்பவருக்கு எதிராக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் மதன்குமாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 25,000 அபராதம் விதித்து கடந்த 2023-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து மதன்குமாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன்குமாா் தரப்பில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும், மனுதாரரும் காதலித்தனா். அப்போது, அந்த பெண்ணின் பெற்றோா், அவருக்கு 40 வயதுடைய உறவினா் ஒருவரை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனா். இதனால், அந்தப் பெண் காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறினாா்.

இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், நெருக்கமாக இருந்துள்ளனா். மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூா்த்தியடைந்துவிட்டது. எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் பெண் 18 வயது பூா்த்தி அடைந்தவராக இருக்க முடியாது. அதேநேரம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் 18 வயதுக்கு உள்பட்டவா் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, மனுதாரருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து, மதன்குமாரை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவ... மேலும் பார்க்க

அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள தவெகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜயும் கலந்துகொள்ள உள்ளார்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல... மேலும் பார்க்க

விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு

கோவை : ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணை தொய்வாக இரு... மேலும் பார்க்க

தமிழக பள்ளிகளிலும் இனி கடைசி பெஞ்ச் கிடையாது!

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க