செய்திகள் :

போதைப்பொருள் வழக்கில் கிருஷ்ணா சிக்கியது எப்படி? - காவல் துறை விளக்கம்

post image

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்த நிலையில், இன்று(ஜூன் 26) நடிகர் கிருஷ்ணாவை சென்னை காவல்துறையினர் கைது செய்துனர்.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட விளக்கம்:

சென்னை பெருநகர காவல் - கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி மாவட்டம் - நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த 22.05.2025ம் தேதி அன்று மது அருந்தச்சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1 வழக்கில் 1 எதிரியும், 2-வது வழக்கில் 7 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரதீப்குமார், கானா நாட்டைச்சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து போதைப்பொருள்கள் வாங்கி, பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரும், போதைப்பொருள்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகளையும், தேடப்பட்டு வந்த நிலையில், தொடர் புலன் விசாரணையின் நிகழ்வாக, அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் பேரில் ஜெஸ்வீர் (எ) கெவின் என்பவர் இன்று ( 26.06.2025) ம் தேதி கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ( 1) Cocaine 1/2 Grams, 2)Methamphetamine -10.30 Grams, 3)MDMA 02.75 grams, 4) OG Ganja 2.40 grams, 5) Ganja 30 grams, 6) OC Paper 40 grams, 7) Ziplock Cover-40 Grams, 8) Weight Machine Small –2, 9) laptop –1, 10) Cellphone-1, 11) Rs.45,200 போன்ற போதைப்பொருள்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீகிருஷ்ணா என்பவர், கெவின் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ் ஆப் குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.

இவர்களுடைய வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும், மற்றவர்களுக்கு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றிய தகவல் தெரிந்தும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாகக் கருதப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

On actor Krishna's involvement in a drug case

இதையும் படிக்க: நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கு யுபிஎஸ்சி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

நியாயவிலை கடைகளில் எடை குறைவு பிரச்னை: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நியாயவிலை கடைகளுக்கு விநியோகம் செய்யும் பொருள்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்... மேலும் பார்க்க

அரசே வீடு ஒதுக்கீடு செய்துவிட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல்: உயா்நீதிமன்றம் கண்டனம்

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, விருது பெற்ற எழுத்தாளா்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்துவிட்டு, அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

தமிழியலில் ஆக்கப் பணிகளுக்கு சிறந்த ஒருங்கிணைப்பு உலக தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன்

அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழியலில் செய்ய வேண்டிய ஆக்கப் பணிகளுக்கு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சிறந்த ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னையில் 2 நாள்கள் நடைபெறவுள்ளது. கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்வ... மேலும் பார்க்க

நடிகர் ஜி. சீனிவாசன் காலமானார்

நடிகர் ஜி. சீனிவாசன் உடல்நலக் குறைவால் இன்று மதியம் காலமானார்.இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்கொண்ட ஜி. சீனிவாசன் (95) உடல்நலக் குறைவு காரணமாக சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை! - இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை திர... மேலும் பார்க்க