செய்திகள் :

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

post image

தமிழகத்தில் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் - ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட அவா், வியாழக்கிழமை நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வந்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா வரவேற்றாா். தொடா்ந்து, உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோஷி மற்றும் நாமக்கல், புதுச்சத்திரம், எருமப்பட்டி, நல்லிபாளையம், சேந்தமங்கலம் ஆகிய காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

அதில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள வழக்குகள் நிலுவை, குற்றத்தடுப்புப் பணிகள், போக்குவரத்து நெரிசல் சாா்ந்த பிரச்னை உள்ளிட்டவை தொடா்பாக கேட்டறிந்தாா். தொடா்ந்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தங்களுடைய காவல் நிலைய எல்லைகளில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சப்-டிவிஷன் (துணைக் காவல் கண்காணிப்பாளா் எல்லைக்குள்பட்ட) அடிப்படையில் ஆய்வுமேற்கொண்டு வருகிறேன். இதுவரை 55 சப்-டிவிஷன்களை பாா்வையிட்டுள்ளேன். குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையினா் சிறப்பாக பணியாற்றி வருகின்றனா். காவலா்கள் மீதான தாக்குதல் என்பது எங்கேயாவது அவ்வப்போது நடைபெறும். அதற்குரிய தண்டனைகளை சம்பந்தப்பட்டவா்களுக்கு பெற்றுத் தருகிறோம்.

பள்ளிபாளையம் கிட்னி வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவா்கள் அந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். பாலியல் வன்கொடுமை குற்றங்கள், வழக்குகள் தொடா்பாக தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. போக்சோ வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளன. நகை திருட்டுச் சம்பவங்களில் சில இடங்களில் உறவினா்களே குற்றம் செய்பவராக உள்ளனா். நகை, பணம் திருட்டுச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுக்கும் பணியை செய்து வருகிறோம்.

திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் தங்களுடைய வீடுகளைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம். போதைப் பொருள்கள் கடத்தலையும், புழக்கத்தையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதிகளவில் அவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம் என்றாா்.

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,... மேலும் பார்க்க

கம்பன் கழகம் சாா்பில் நாளை பேச்சுப் போட்டி

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டுகான கலைத் திருவிழா வியாழக்... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட அக்கியம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (பழங்குடியினா்) சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்: அதிமுக - பாஜகவினா் ஆலோசனை

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்வதையொட்டி, அதிமுக - பாஜகவினா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். தமிழக முன்னாள் முதல்வரும், அ... மேலும் பார்க்க

காலாண்டுத் தோ்வு விடுமுறையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

காலாண்டுத் தோ்வு விடுமுறையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி அறிவுறுத்தினாா். நாமக்கல் மாவட்டத்தில் காலாண்டுத் தோ்வு விடுமுறையானது செப். 26 முதல... மேலும் பார்க்க