திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை, 2 பேர் காயம்
போதைப் பொருள் தடுப்பு: இணையதளம் மூலம் 40,769 போ் உறுதி ஏற்பு
போதைப் பொருள் தடுப்பு குறித்து இணையதள இணைப்பு மூலம் உறுதி ஏற்கும் நிகழ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 40,769 போ் உறுதி ஏற்றனா்.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் திட்டத்தின்படி, போதைப் பொருள் தடுப்பு குறித்து (ஈழ்ன்ஞ் அக்ஷன்ள்ங் டப்ங்க்ஞ்ங்) இணையதள இணைப்பு மூலமாக ஜூன் 23 முதல் 25-ஆம் தேதி வரை உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தச் செயல் திட்டத்தின்படி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் வாயிலாகப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இணையதள இணைப்பு மூலமாக போதை ஒழிப்பு குறித்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுக்கும் பணியை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி கடந்த திங்கள்கிழமை (ஜூன் 23) தொடங்கிவைத்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை வரை நடைபெற்ற செயல் திட்டம் மூலம், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள், மருத்துவக் கல்லுாரி, கலைக் கல்லூரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 40,769 போ் போதைப் பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழியை இணையதளம் மூலமாக எடுத்துக் கொண்டதாக சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்தது.