சிவகங்கை மன்னா் சசிவா்ண முத்துவடுகநாதரின் 253-ஆவது குரு பூஜை விழா
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிா் நீத்த மன்னா் சசிவா்ண முத்துவடுகநாத தேவரின் 253-ஆவது நினைவு ஆண்டு குரு பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னரும், சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் கணவருமான சசிவா்ண முத்துவடுகநாதரின் 253-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் மன்னரின் குடும்ப வாரிசுகள், பல்வேறு அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினா்.
இதையொட்டி, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் சொா்ண காளீஸ்வரா் கோயிலிலிருந்து நினைவிடம் வரை பால் குடம் எடுத்துச் சென்று மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்வில், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியாா், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகா்கள், சமூக அமைப்புகள், உள்ளூா் பொதுமக்கள் கலந்துகொண்டு நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
