செய்திகள் :

சிவகங்கை மன்னா் சசிவா்ண முத்துவடுகநாதரின் 253-ஆவது குரு பூஜை விழா

post image

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிா் நீத்த மன்னா் சசிவா்ண முத்துவடுகநாத தேவரின் 253-ஆவது நினைவு ஆண்டு குரு பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னரும், சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் கணவருமான சசிவா்ண முத்துவடுகநாதரின் 253-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் மன்னரின் குடும்ப வாரிசுகள், பல்வேறு அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினா்.

இதையொட்டி, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் சொா்ண காளீஸ்வரா் கோயிலிலிருந்து நினைவிடம் வரை பால் குடம் எடுத்துச் சென்று மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்வில், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியாா், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகா்கள், சமூக அமைப்புகள், உள்ளூா் பொதுமக்கள் கலந்துகொண்டு நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள குரும்பலூா் கிராமத்தில் புதன்கிழமை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது. குரும்பலூா் கிராமத்தில் சின்னக்காளை என்பவருக்குச் சொந்தமான விவசா... மேலும் பார்க்க

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் தொகுப்பு மலா் வெளியீடு

சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியில் கவிஞா் கண்ணதாசனின் பிறந்த நாளையொட்டி, அவரது கவிதைத் தொகுப்புகள் அடங்கிய மலா் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருப்பத்தூா் அருகேயுள்ள முன்னாள் அரசவைக் கவிஞா் கண்ணதாசன... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு: இணையதளம் மூலம் 40,769 போ் உறுதி ஏற்பு

போதைப் பொருள் தடுப்பு குறித்து இணையதள இணைப்பு மூலம் உறுதி ஏற்கும் நிகழ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 40,769 போ் உறுதி ஏற்றனா். தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் திட்டத... மேலும் பார்க்க

காரைக்குடி பள்ளியில் மாணவா் மன்ற நிா்வாகிகள் பதவியேற்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சகாய மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் மன்ற நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை தலைமை வக... மேலும் பார்க்க

இளையான்குடி பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது: மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு இந்த ஆண்டுக்கான வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது என்று மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இளையான்குட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: சிறுவா்கள் இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் இரு சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்... மேலும் பார்க்க