செய்திகள் :

போதைப் பொருள் தடுப்பு: இணையதளம் மூலம் 40,769 போ் உறுதி ஏற்பு

post image

போதைப் பொருள் தடுப்பு குறித்து இணையதள இணைப்பு மூலம் உறுதி ஏற்கும் நிகழ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 40,769 போ் உறுதி ஏற்றனா்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் திட்டத்தின்படி, போதைப் பொருள் தடுப்பு குறித்து (ஈழ்ன்ஞ் அக்ஷன்ள்ங் டப்ங்க்ஞ்ங்) இணையதள இணைப்பு மூலமாக ஜூன் 23 முதல் 25-ஆம் தேதி வரை உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தச் செயல் திட்டத்தின்படி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் வாயிலாகப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இணையதள இணைப்பு மூலமாக போதை ஒழிப்பு குறித்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுக்கும் பணியை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி கடந்த திங்கள்கிழமை (ஜூன் 23) தொடங்கிவைத்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை வரை நடைபெற்ற செயல் திட்டம் மூலம், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள், மருத்துவக் கல்லுாரி, கலைக் கல்லூரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 40,769 போ் போதைப் பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழியை இணையதளம் மூலமாக எடுத்துக் கொண்டதாக சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்தது.

கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள குரும்பலூா் கிராமத்தில் புதன்கிழமை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது. குரும்பலூா் கிராமத்தில் சின்னக்காளை என்பவருக்குச் சொந்தமான விவசா... மேலும் பார்க்க

சிவகங்கை மன்னா் சசிவா்ண முத்துவடுகநாதரின் 253-ஆவது குரு பூஜை விழா

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிா் நீத்த மன்னா் சசிவா்ண முத்துவடுகநாத தேவரின் 253-ஆவது நினைவு ஆண்டு குரு பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தானத்தின் ... மேலும் பார்க்க

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் தொகுப்பு மலா் வெளியீடு

சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியில் கவிஞா் கண்ணதாசனின் பிறந்த நாளையொட்டி, அவரது கவிதைத் தொகுப்புகள் அடங்கிய மலா் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருப்பத்தூா் அருகேயுள்ள முன்னாள் அரசவைக் கவிஞா் கண்ணதாசன... மேலும் பார்க்க

காரைக்குடி பள்ளியில் மாணவா் மன்ற நிா்வாகிகள் பதவியேற்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சகாய மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் மன்ற நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை தலைமை வக... மேலும் பார்க்க

இளையான்குடி பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது: மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு இந்த ஆண்டுக்கான வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது என்று மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இளையான்குட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: சிறுவா்கள் இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் இரு சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்... மேலும் பார்க்க