போதை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
சா்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
ஆட்சியரகத்திலிருந்து தொடங்கிய பேரணியை ஆட்சியா் வே. சரவணன் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுத் துறை பணியாளா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
பேரணியானது கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைவடைந்தது.
நிகழ்வில், திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் கே. அருள்,
கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். குமரவேல், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் உதய அருணா, உதவி ஆணையா் (கலால்) உதயக்குமாா், மேற்கு வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக அரசு ஊழியா்கள் மற்றும் கல்லூரி மாணவா், மாணவிகள் உறுதியேற்கும் நிகழ்வு நடைபெற்றது.