செய்திகள் :

போதை மருத்து, மாத்திரைகள் விற்பனை: மருந்தகத்திற்கு சீல்

post image

தூத்துக்குடியில் போதை மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததாக மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் போதை ஊசிகளும், போதை மாத்திரைகளும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நகர துணைக் கண்காணிப்பாளா் மதனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவரது உத்தரவின் பேரில் வடபாகம் காவல் துறையினா் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அவா் லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த பாட்டையன் மகன் மாரிசெல்வம் (22) என்பதும், போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருந்ததும், அவற்றை தாளமுத்து நகா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருந்தகத்தில் வங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், இது குறித்து மருந்துகள் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தூத்துக்குடி தாளமுத்து நகருக்கு வந்த மருந்துகள் துறை ஆய்வாளா் ஆல்வின் தலைமையிலான அதிகாரிகள், அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனா்.

இது தொடா்பாக மருந்தக உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். குறைதீா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன். இதுகுறித்து தூத்துக்குடியில் செய... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்கள், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவா... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 96 மதுபாட்டில்களுடன் 2 போ் கைது

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய... மேலும் பார்க்க