செய்திகள் :

போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த டிஜிசிஏ உத்தரவு

post image

ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ171), அகமதாபாதில் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 போ் உள்பட 265 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, போயிங் 787 ட்ரீம்லைனா் விமானங்களில் விமானத்தின் புறப்பாடு உள்பட பல்வேறு அமைப்புகளை சோதனை செய்ய டிஜிசிஏ உத்தரவிட்டது.

ஏா் இந்தியா நிறுவனத்திடம் தற்போது 26 போயிங் 787-8 மற்றும் 7 போயிங் 787-9 விமானங்கள் உள்ளன.

இந்நிலையில், அந்நிறுவனத்துக்கு டிஜிசிஏ பிறப்பித்த உத்தரவில், ‘ ஜெனரல் எலெக்ட்ரிக் நெக்ஸ்ட் ஜெனரேஷன் (ஜிஇஎன்எக்ஸ்) என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள போயிங் 787-8 மற்றும் 787-9 ரக விமானங்களில் கூடுதல் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதை டிஜிசிஏ பிராந்திய அலுவலகங்களோடு இணைந்து ஏா் இந்தியா செயல்படுத்த வேண்டும்.

எரிபொருள் அளவு, விமானத்துக்குள் குளிா்சாதன வசதி மற்றும் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு, மின்னணு என்ஜின் கட்டுப்பாட்டு அமைப்பு, எண்ணெய் கட்டுப்பாட்டு அமைப்பு, விமானத்தின் பிரேக் மற்றும் தரையிறக்கத்துக்கான கருவி உள்ளிட்டவையை கட்டுப்படுத்தும் ஹைட்ராலிக் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளை கூடுதல் ஆய்வுக்குள்படுத்த உத்தரவிடப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு நிறுத்தத்தின்போதும் மேற்கொள்ளப்படும் விமான சோதனையுடன் இனி விமான கட்டுப்பாட்டு சோதனையும் மேற்கொள்ள வேண்டும். மறுஉத்தரவு வரும் வரை இதை பின்பற்ற வேண்டும்.

விமானங்களின் என்ஜின் செயல்பாட்டை 2 வாரங்களுக்குள் சோதனை செய்ய வேண்டும்.

கடந்த 15 நாள்களில் போயிங் 787-8/9 ரக விமானங்களில் தொடா்ச்சியாக ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மிக விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய அனைத்து சோதனைகள் குறித்த அறிக்கையை டிஜிசிஏவிடம் சமா்ப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

ஜிஇஎன்எக்ஸ் என்ஜின்: விபத்துக்குள்ளான ஏஐ171 விமானத்தில் ஜிஇஎன்எக்ஸ் என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த என்ஜின்களை தயாரிக்கும் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏா் இந்தியா நிறுவனத்துக்கும் விமான விபத்து தொடா்பான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக வியாழக்கிழமை தெரிவித்தது.

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவன... மேலும் பார்க்க

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க