செய்திகள் :

`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?’ - சீமான் காட்டம்

post image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது.

அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “காதலிப்பவர்களை சாதி பார்த்து ஆவணக் கொலை செய்பவர்கள் எந்த மன நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவன் பிறப்பினால் உயர்ந்தவன் அல்ல, அனைத்தும் சமுதாய சீர்கேடுகளையும் செய்பவனை பிறப்பால் உயர்ந்தவன் என்று எப்படி கருத முடியும். அண்ணல் அம்பேத்கர் போல் இங்கு யாரும் உயர்ந்தவர் இல்லை. கல்வி, அறிவு, நேர்மை ஆகிய செயல்களைச் செய்பவனே உயர்ந்தவன். ஒருவனை சாதியில் உயர்ந்தவன் என்று கருத முடியாது.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

சாதிக்காக கொலை செய்யாதே; சாதியை கொலை செய்!

கவின் படித்து கற்றுத் தேர்ந்தவன் நல்ல பணியில் இருந்திருக்கிறான், நல்ல குணத்தையும் கொண்டிருந்திருக்கிறான். இதை மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர அவன் எந்த சாதியை சேர்ந்தவன் என பார்க்கக் கூடாது. இப்படி மாதம் ஒரு கொலையைச் செய்து சிறைக்குச் செல்கின்ற ஒரு சம்பவம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாதிச் சண்டைகளை பெருகிப் போகின்ற நிலையில் சாதிக்காக கொலை செய்யாதே. சாதியை கொலை செய். சாதிக்காக கொலை செய்யப்படும் இடங்களில் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் நிற்கிறது. சாதிய வாக்குகள் நமக்கு வராமல் போய்விடும் என ஓட்டுக்காக நிற்கும் அரசிடம் நாட்டை கொடுத்தால் நாடு எப்படி முன்னேறும்.

தமிழகத்தில் மேய்ச்சல் புறம்போக்கு நீக்க கூடாத புறம்போக்கு என எதுவுமே இல்லை. கடைசியாக இருந்த மலையடிவாரத்தில் கூட எங்கள் ஆடு மாடுகளை மேய்க்க கூடாது எனத் தடுப்பது அறமா?. உழவர்கள் மற்றும் நெசவுத் தொழிலாளிகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உழவிற்கும், நெசவுத் தொழிலுக்கும், சீமானுக்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கு, உணவும், உடையும் பயன்படுத்தும் அனைவருக்குமே இவர்களுடன் சம்பந்தம் இருக்கிறது.

தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என கூறப்படுகிறது. ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 14,000 பேர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதுவா தமிழக வளர்ச்சி? தூய்மை தொழிலாளர்கள் 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை அழைத்து பேசுவதற்கு இங்கு ஒரு அதிகாரிகள் கூட இல்லையா?. இதுவா வளர்ச்சி?. ஒரு பக்கம் நெசவாளர் போராட்டம், ஒருபக்கம் உழவர் போராட்டம். எதுல வளர்ச்சினு கேட்டா பதில் இருக்கா?

சீமான்

ஒரு துறையில் 3100 வேலைக்கு 13 லட்சம் பேர் பரீட்சை எழுதுகிறார்கள். 13 லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பது தான் வளர்ந்த நாடா?. வளர்ந்த நாட்டில் பால் விலை, நூல் விலை, மின்கட்டணம் எப்படி உயர்ந்துச்சு? அரசு சாமானியர்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் அதை இப்படி மேடை போட்டு கேள்வி கேட்போம்” என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

"அலங்காரத்திற்காக மாநில கல்விக் கொள்கை என்று நாடகமாடுகிறது திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கல்விக்கொள்கையை இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் இதனை விமர்சித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்க... மேலும் பார்க்க

"முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?" - அமைச்சர் துரைமுருகன்

வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் பாஜக மீது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில், ... மேலும் பார்க்க

பாகிஸ்தான், இஸ்ரேல் வரிசையில் கம்போடியா - ட்ரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரை - காரணம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு, 'நோபல் பரிசு ஆசை' ரொம்பவே வந்துவிட்டது என்று கூறலாம். பாகிஸ்தான் ஆரம்பித்த ஒன்று! இந்தத் தீயை முதன்முதலில் பற்ற வைத்த... மேலும் பார்க்க

ராமதாஸ், அன்புமணி தனது அறையில் ஆஜராக சொல்லும் நீதிபதி! - இன்று மாலை நடக்குமா அந்த சந்திப்பு?

பாமக-வில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழ... மேலும் பார்க்க

J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்மு - காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. முதல்வராகப் பதவியேற்ற ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து வர... மேலும் பார்க்க

`11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து' - மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்... மேலும் பார்க்க